செய்திகள்

திருமணம் செய்யாமல் வாழ்ந்த காதலி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை

Published On 2018-07-22 11:17 GMT   |   Update On 2018-07-22 11:17 GMT
கோவை அன்னூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அன்னூர்:

கோவை அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையத்ததை சேர்ந்தவர் முத்துகுமார் ( வயது 48). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பச்சையம்மாள் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பச்சையம்மாள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதனால் முத்துக்குமார் மிகுந்த மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் முத்துக்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News