செய்திகள்

தேனி அருகே டிராக்டர் வாங்கி தருவதாக வாலிபரிடம் பணம் மோசடி

Published On 2018-07-14 09:58 GMT   |   Update On 2018-07-14 09:58 GMT
தேனி அருகே டிராக்டர் வாங்கி தருவதாக பணம் மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி:

தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் வைகுண்டம். இவர் தேனி-மதுரை சாலையில் உள்ள தனியார் டிராக்டர் டீலர் மதன்குமாரிடம் ரூ.5 லட்சம் பணம் கொடுத்து டிராக்டர் தருமாறு கேட்டுள்ளார். சிறிது நாட்கள் கழித்து தருவதாக கூறிய மதன்குமார் அந்த பணத்தை கம்பெனியில் செலுத்தாமல் மோசடி செய்துளார்.

டிராக்டரும் வாங்கி தராமல் தான் கொடுத்த பணத்தையும் திருப்பி தராததால் வைகுண்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த பழனி செட்டிபட்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.

வைகுண்டம் கொடுத்த பணத்தில் ரூ.4,47,000 மட்டுமே மதன்குமார் திருப்பி கொடுத்தார். மீதி தொகையை தராததால் மதன்குமார் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News