செய்திகள்
பொறியியல் கலந்தாய்வு விரைவில் தொடங்கும் - உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி
பொறியியல் கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #EngineeringCounseling
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்விதுறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
மருத்துவ படிப்பு கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். மருத்துவ கலந்தாய்வு தள்ளிப் போனால் பொறியியல் கவுன்சிலிங்கை தொடங்கி விடுவோம்.
நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கையும், அரசின் விசாரணை அறிக்கையும் ஒன்றாக வெளியிடப்படும்.
யூ.ஜி.சி. விவகாரத்தில், மாநில அரசுகளின் கருத்துக்களை தெரிவிக்க வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழக அரசின் கருத்தக்கள் அடங்கிய அறிக்கை சமர்பிக்கப்படும்.
யூ.ஜி.சி.க்கு பதிலாக வேறு அமைப்பு வந்தாலும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #EngineeringCounseling