செய்திகள்
கொசஸ்தலை ஆற்றில் 15 தடுப்பணை கட்டும் ஆந்திரா
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 15 தடுப்பணைகளை ஆந்திர மாநில அரசு கட்டி வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. #Kosasthalaiyarriver
சென்னை:
ஆந்திர மாநிலத்தில் லவா, குசா என 2 ஆறுகள் உற்பத்தியாகின்றன. அவை கொசஸ்தலை ஆற்றில் கலக்கின்றன.
இந்த நிலையில் லவா ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை ஆந்திர மாநில அரசு கட்டி வருகிறது. எஸ்.ஆர்.புரம்- பள்ளிப்பட்டு வரை 15 கி.மீ. தூரத்தில் 15 தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
தலா ரூ.40 லட்சம் செலவில் இந்த தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. அவற்றில் பல இடங்களில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
தடுப்பணைகள் கட்டுமான பணி முடிவடையும் நிலையில் கொசஸ்தலை ஆற்றுக்கு வரும் லவா ஆற்றின் நீரின் அளவு குறையும். அதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவில் குறையும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதே நேரத்தில் குசா ஆற்றில் தடுப்பணைகள் கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவு மிக அதிக அளவில் குறையும். #Kosasthalaiyarriver