செய்திகள்

கம்பத்தில் வீட்டில் இருந்த பெண்ணிடம் நகை-பணம் கொள்ளை

Published On 2018-07-04 11:46 GMT   |   Update On 2018-07-04 11:46 GMT
கம்பத்தில் பெண்ணிடம் நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:

கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி மனைவி ஆனந்தி (வயது36). இவர் பையில் ரூ.17 ஆயிரம், தங்கத்தோடு, செல்போன், கேன்டீன்கார்டு ஆகியவற்றை வீட்டின் முன்பு வைத்துவிட்டு உள்ளே சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது அந்த பை மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் ஆனந்தியை நோட்டமிட்டு நகை-பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணிடம் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News