செய்திகள்

பரமத்திவேலூர் அருகே கூலி தொழிலாளி தற்கொலை

Published On 2018-07-03 11:01 GMT   |   Update On 2018-07-03 11:01 GMT
பரமத்திவேலூர் அருகே கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் கடந்த 15 வருடங்களாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் இனிமேல் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்து வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். வி‌ஷம் உடல் முழுவதும் பரவியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை உறவினர்கள் விரைந்து வந்து மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்னிற நந்தகுமார் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News