செய்திகள்

குழந்தை இல்லாததால் வி‌ஷம் குடித்து டிரைவர் தற்கொலை

Published On 2018-06-27 12:05 GMT   |   Update On 2018-06-27 12:05 GMT
திருமங்கலம் அருகே குழந்தை இல்லாததால் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள குராயூரைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 36). இவரது மனைவி முத்து மாரியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

குடிபோதைக்கு அடிமையான சரவணக்குமார் தனது டிரைவர் தொழிலையும சரிவர செய்யவில்லை.

வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து உயிருக்கு போராடியபடி இருந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக சரவணக்குமாரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News