செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4000 கனஅடியாக சரிந்தது - 4வது நாளாக பரிசல் இயக்க தடை

Published On 2018-06-20 10:12 GMT   |   Update On 2018-06-20 10:12 GMT
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று 4 ஆயிரம் கனஅடியாக இருந்தபோதிலும் 4-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்:

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பின. இதனால் அணைகளில் இருந்து உபரி நீரை காவிரி ஆற்றில் திறந்த விடப்பட்டது. அந்த உபரி நீர் பிலிக்குண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்தடைந்தது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 33 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் குறைவாக திறந்து விடப்பட்டது.

ஒகேனக்கல்லில் நேற்று 9000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4000 கனஅடியாக குறைந்தது. மீண்டும் கர்நாடக மாநிலத்தில் மழை பெய்தால் மட்டும் அங்கு அணைகள் நிரம்பி வழிந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று 4 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தபோதிலும் 4-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News