செய்திகள்

சிறுமுகையில் காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்

Published On 2018-06-18 11:55 GMT   |   Update On 2018-06-18 11:55 GMT
சிறுமுகையில் காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பாளையம்:

சிறுமுகை அருகே உள்ள மோதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது56) விவசாயி. இவர் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை காப்புக்காடு பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் விவசாயம் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தோட்டத்து சாலையில் படுத்துத் தூங்கினார். அதிகாலை ஏதோ சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோதுஒருகாட்டு யானை சாலைக்குள் தும்பிக்கையை விட்டு எதையோ தேடியது. யானையை கண்டதும் அவர் அலறி அடித்துக்கொண்டு எதிர்திசையில் ஓடினார். யானை விடாமல் அவரை துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க அவர் தண்ணீருக்குள் இறங்கி நின்று கொண்டார்.

அப்போதும் யானை அவரை விடாமல் தும்பிக்கையால் அவரைத்தூக்கி தண்ணீருக்குள் போட்டு மிதித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. யானை தாக்கியதில் அவரது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கதினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தார்.

Tags:    

Similar News