செய்திகள்

உடுமலை அருகே விபத்து- 2 பேர் பலி

Published On 2018-06-18 09:49 GMT   |   Update On 2018-06-18 09:49 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஏற்பட்ட விபத்தில் கோவை தனியார் மில் மேலாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள போடிப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (55). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மில்லில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற லட்சுமணன் (42). பெயிண்டர். இவர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் உடுமலை- திருமூர்த்தி மலை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அங்குள்ள ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள வளைவில் சென்ற போது எதிரே அமராவதி நகரில் இருந்து திருப்பூர் நோக்கி ஒரு கார் வந்தது.

இந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாமிநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

செல்வராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தளி போலீசில் புகார் செய்யப்பட்டது. உடுமலை டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யாசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News