செய்திகள்

திருவாரூரில் 2 குழந்தைகளுடன் பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் - கணவர் புகார்

Published On 2018-06-14 15:55 GMT   |   Update On 2018-06-14 15:55 GMT
2 குழந்தைகளுடன் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததாக கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவாரூர், ஜூன்14-

திருவாரூர் தாலுகா விளமல் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது40). இவரது மனைவி கமலா(33). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கமலா தனது 2 குழந்தைகளுடன் திடீர் என மாயமாகி விட்டாராம்.

இதுகுறித்த இளங்கோவன் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அதே பகுதியில் சலூன் கடை வைத்துள்ள குமரேசன் என்பவர் கடத்தி சென்று விட்டதாகவும், அவர்களை மீட்டு தருமாறும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கமலாவுடன் குமரேசன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்து விசாரித்து வந்துள்ளனர். இந்தநிலையில் குழந்தைகளுடன் கமலா, குமரேசனுடன் தலைமறைவாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News