செய்திகள்
போத்தனூர் அருகே கத்திமுனையில் வாலிபரை மிரட்டி காரை வழிப்பறி செய்த 4 பேர் கைது
போத்தனூர் அருகே கத்திமுனையில் வாலிபரை மிரட்டி காரை வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை இடையர் பாளையத்தை சேர்ந்தவர் ஆசிக் (வயது 23).
இவர் தனது காரில் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது காரை வழிமறித்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி ஆசிக்கின் கார் மற்றும் அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி போத்தனூரை சேர்ந்த சயித் பக்ருதீன்(40), சயித் அலி(25), யாசர் மூசாபத் (23), ஆசிஸ் ரகுமான்(22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார், ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் சயித்பக்ருதீன், சயித் அலி, யாசர் மூசாபத் ஆகியோர் அதேபகுதியில் ஒரு கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் பூஜை பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இந்த வழக்கில் ஜாகிர் உசைன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.