செய்திகள்

போத்தனூர் அருகே கத்திமுனையில் வாலிபரை மிரட்டி காரை வழிப்பறி செய்த 4 பேர் கைது

Published On 2018-05-28 10:38 GMT   |   Update On 2018-05-28 10:38 GMT
போத்தனூர் அருகே கத்திமுனையில் வாலிபரை மிரட்டி காரை வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை இடையர் பாளையத்தை சேர்ந்தவர் ஆசிக் (வயது 23).

இவர் தனது காரில் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது காரை வழிமறித்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி ஆசிக்கின் கார் மற்றும் அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி போத்தனூரை சேர்ந்த சயித் பக்ருதீன்(40), சயித் அலி(25), யாசர் மூசாபத் (23), ஆசிஸ் ரகுமான்(22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார், ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் சயித்பக்ருதீன், சயித் அலி, யாசர் மூசாபத் ஆகியோர் அதேபகுதியில் ஒரு கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் பூஜை பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இந்த வழக்கில் ஜாகிர் உசைன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News