செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-05-23 10:44 GMT   |   Update On 2018-05-23 10:44 GMT
காவிரி நீர்பிடிப்பு மற்றும் கிருஷ்ணகிரி - கர்நாடக எல்லையில் பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்:

ஒகேனக்கல்லுக்கு நேற்று 800 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி - கர்நாடக எல்லையில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1700 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தற்போது கோடை விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்நு சுற்றுலா பயணிகள் இன்று ஒகேனக்கல் வந்திருந்தனர்.
Tags:    

Similar News