செய்திகள்

மதுரை நர்சிடம் ரூ.1.70 லட்சம் மோசடி - கணவன், மனைவிக்கு வலைவீச்சு

Published On 2018-05-17 11:42 GMT   |   Update On 2018-05-17 11:42 GMT
மதுரையை சேர்ந்த நர்சிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:

மதுரை பெருங்குடி அருகே உள்ள பரம்புபட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி செல்வி (வயது32). இவர் மதுரை ரிங் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

இவரது தோழி அழகு பிள்ளை மற்றும் அவரது கணவர் அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 2 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1.70 லட்சம் கடன் வாங்கி உள்ளனர்.

இதற்காக செல்வியிடம் 2 பேரும் கையெழுத்தட்ட புரோநோட் மற்றும் ஆவணங்களையும் கொடுத்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட தேதியில் அவர்கள் பணம் கொடுக்கவில்லை. இதனால் செல்வி மதுரை இளமனூரில் உள்ள அழகு பிள்ளை வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார்.

அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அலெக்ஸ்பாண்டியன் செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து செல்வி பெருங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News