செய்திகள்

கார் - லாரி மோதல்: நிதி நிறுவன உரிமையாளர் பலி

Published On 2018-05-13 14:24 GMT   |   Update On 2018-05-13 14:24 GMT
காரும் லாரியும் மோதிய விபத்தில் நிதி நிறுவன உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாலாபேட்டை:

குளித்தலையில் இருந்து ஈரோட்டிற்கு மணல் லாரி சென்றது. அதனை குளித்தலை நாப்பாலையத்தை சேர்ந்த பத்மநாதன் (46) ஓட்டிச்சென்றார். அப்போது எதிரே அரவக்குறிச்சி தாலுகா சின்ன கேத்தம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் பாலசுப்ரமணி (50) ஓட்டி வந்த காரும், லாரியும் மோதின. இதில் பாலசுப்ரமணி(50) ,அவரது மனைவி முத்து லட்சுமி (41), மகன் தினேஸ்(21) , மகள் திவ்யா(18) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி இறந்தார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News