செய்திகள்
கொள்ளை முயற்சி நடந்த கோவிலை படத்தில் காணலாம்.

போச்சம்பள்ளி அருகே மாரியம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி

Published On 2018-04-21 09:04 GMT   |   Update On 2018-04-21 09:05 GMT
போச்சம்பள்ளி அருகே மாரியம்மன் கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி-சந்தூர் சாலை கூச்சகல்லூர் பகுதியில் பாட்ட மாரியம்மன் கோவில் உள்ளது.

நேற்றிரவு கொள்ளையர்கள் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைக்க முயற்சி செய்தனர். ஆனால் உடைக்க முடியவில்லை. பின்னர் கோவில் கருவறைக்கு சென்று பூட்டை உடைக்க முயன்றனர்.

அதையும் உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் கோவில் வளாகத்தில் உள்ள துணிகளை எடுத்து எலக்ட்ரிக் சாதனமான சவுண்ட் சர்வீஸ் மற்றும் கோவில் கருவறை மீதும் துணியை போட்டு தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வந்து தீயை அணைத்தனர். இது குறித்து நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையர்கள் உண்டியலை உடைக்க முடியாததால் கோவிலுக்கு தீ வைத்து விட்டு சென்றதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News