செய்திகள்

போலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் - முதலமைச்சர் தகவல்

Published On 2018-04-20 05:50 GMT   |   Update On 2018-04-20 05:50 GMT
போலி முத்திரைத் தாள்களை தடுக்க, மின்னணு ஸ்டாம்ப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNCM #EdappadiKPalaniswami
சென்னை:

தமிழகத்தில் வழக்கு தொடர்வதற்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் இ-ஸ்டாம்பிங் முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கி வைத்தனர்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், போலி முத்திரைத் தாள்களை தடுக்க, மின்னணு ஸ்டாம்ப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் அறிமுகம் செய்யப்படும் இந்த வசதி விரைவில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

நிலுவை வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர 149 நீதிமன்றம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். #TNCM #EdappadiKPalaniswami
Tags:    

Similar News