செய்திகள்

திருவள்ளூரில் 3 மாவோயிஸ்டுகள் கோர்ட்டில் ஆஜர்

Published On 2018-02-21 09:12 GMT   |   Update On 2018-02-21 09:12 GMT
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தில் மாவோயிஸ்டுகளாக கைது செய்யப்பட்ட 3 மாவோஸ்டுகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தில் மாவோயிஸ்டுகளாக தசரதன், அவரது மனைவி செண்பகவல்லி, வெற்றி வீரபாண்டியன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 15-ந்தேதி 3 பேரையை மேல் விசாரணைக்காக 10 நாள் போலீஸ் காவலில் எடுக்க திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை இளங்கோவன் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மூவரும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். #tamilnews
Tags:    

Similar News