செய்திகள்

கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல்- மேடை பாடகர் பலி

Published On 2018-02-15 13:10 GMT   |   Update On 2018-02-15 13:10 GMT
கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் மேடை பாடகர் பலியானார். இசைக்கலைஞர் படுகாயம் அடைந்தார்.

பாகூர்:

கடலூர் பாதிரி குப்பம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்கொழுந்து (வயது 50). மேடை இசை பாடகர்.

நேற்று இரவு புதுவை முருங்கப்பாக்கத்தில் நடந்த இசை கச்சேரியில் பங்கேற்க சிவக்கொழுந்துவும், புவனகிரி பகுதியை சேர்ந்த தபேலா இசை கலைஞர் ஜெயசீலன் (33) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக்கொண்டு இருந்தனர்.

நள்ளிரவு 11.30 மணி அளவில் கிருமாம்பாக்கம் அருகே கந்தன்பேட் என்ற இடத்தில் வந்த போது அந்த வழியாக வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சிவக்கொழுந்துவும், ஜெயசீலனும் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவக்கொழுந்து இறந்து போனார். ஜெயசீலனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். #tamilnews

Tags:    

Similar News