செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே பால் கடையில் ரூ.1¼ லட்சம் பணம் கொள்ளை

Published On 2018-01-16 12:23 GMT   |   Update On 2018-01-16 12:23 GMT
திருத்துறைப்பூண்டி அருகே பால் கடையில் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வ குமார் (வயது 29). இவர் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவில் பால் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் வழக்கம் போல் கடையை திறக்க செல்வகுமார் வந்தார். அப்போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

பின்னர் கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு கல்லாபெட்டியில் வைத் திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

கடையின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

இந்த கொள்ளை சம்பவம் பற்றி செல்வகுமார் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News