செய்திகள்
தந்தை மீது பாலியல் புகார்: இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
தந்தை மீது பாலியல் புகார் கொடுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 32). இவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், நாச்சியப்பன் ஆகியோர் பாலியல் கொடுமை செய்ததாக போலீசில் மகாலட்சுமி புகார் கொடுத்தார்.
இது குறித்து காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நாச்சியப் பனின் மகன் முத்துக்காளை (24), மகாலட்சுமியின் வீட்டுக்கு சென்று தகராறு செய்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
வீட்டின் முன்பகுதியையும் உடைத்ததாக தெரிகிறது. இது குறித்து மகாலட்சுமி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மாயகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து முத்துக்காளையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.