செய்திகள்

சிவகாசியில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் அக்காள்- தங்கை பலி

Published On 2017-10-19 15:21 GMT   |   Update On 2017-10-19 15:21 GMT
பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அக்காள் தங்கை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பழைய வெள்ளையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 38). இவர், தனது மனைவி பாலீஸ்வரி, மகள்கள் சுபிக்ஷா (11), நிதிஷா (4) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசி சென்றார்.

பின்னர் நேற்று இரவு 10.30 மணியளவில் ஊருக்கு புறப்பட்டனர். திருத்தங்கல் பகுதியில் தீப்பெட்டி ஆலை அருகே வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் திருத்தங்கல்லை சேர்ந்த அருள்ராஜ் (19), அருண்குமார் (19) ஆகியோர் வந்தனர். எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக் கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் சிறுமிகள் மற்றும் அவர்களது பெற்றோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த நிதிஷா சம்பவ இடத்திலேயே பலியானார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுபிக்ஷா, சிவக்குமார், பாலீஸ்வரி ஆகியோர் சிகிச்சைக்காக ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் மேல்சிகிச்சைகாக சுபிக்ஷா மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபிக்ஷா பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அருள்ராஜ், அருண்குமார் கைது செய்யப்பட்டனர். மோட்டார் சைக்கிள் விபத்தில் சகோதரிகள் உயிர் இழந்த சம்பவம் சிவகாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News