செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 78 அடியை எட்டியது

Published On 2017-09-19 11:54 GMT   |   Update On 2017-09-19 11:54 GMT
மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், அணை நீர்மட்டம் 78 அடியை எட்டியுள்ளது.
சேலம்:

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு கடந்த 2 மாதமாக வந்து கொண்டிருக்கிறது. நேற்று 6,853 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 6,757 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீரே வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 77.39 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 77.80 அடியாக உயர்ந்தது. பிற்பகல் 78 அடியை எட்டியது.
Tags:    

Similar News