செய்திகள்
ஆரணி ஆற்றில் சொகுசு காரில் மணல் கடத்தல்: வாலிபர் கைது
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் சொகுசு காரில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் மணி மனோகரன் ஆரணி ஆற்று படுகையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றார்.
அப்போது ஒரு சொகுசு கார் ஆற்றின் கரை ஓரமாக நின்று கொண்டிருந்தது. சந்தேகமடைந்த மணி மனோகரன் காரை நெறுங்கியதும் அதிலிருந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.
அவரை சப்-இன்ஸ்பெக்டர் மணிமனோகரன் மடக்கி பிடித்தார். காரை சோதனை செய்த போது 25 மணல் மூட்டைகள் இருந்தது. இதையடுத்து அவற்றை காருடன் பறிமுதல் செய்தார்.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்சிற்றபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்கிற மணி என்பதும் காரில் மணல் கடத்தி வந்ததும் தெரிந்தது.
அவரை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் மணி மனோகரன் ஆரணி ஆற்று படுகையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றார்.
அப்போது ஒரு சொகுசு கார் ஆற்றின் கரை ஓரமாக நின்று கொண்டிருந்தது. சந்தேகமடைந்த மணி மனோகரன் காரை நெறுங்கியதும் அதிலிருந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.
அவரை சப்-இன்ஸ்பெக்டர் மணிமனோகரன் மடக்கி பிடித்தார். காரை சோதனை செய்த போது 25 மணல் மூட்டைகள் இருந்தது. இதையடுத்து அவற்றை காருடன் பறிமுதல் செய்தார்.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்சிற்றபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்கிற மணி என்பதும் காரில் மணல் கடத்தி வந்ததும் தெரிந்தது.
அவரை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.