செய்திகள்

மீஞ்சூர் அருகே 10 கண்டெய்னர் லாரி மீது கல் வீசி தாக்குதல்

Published On 2017-08-11 09:22 GMT   |   Update On 2017-08-11 09:22 GMT
மீஞ்சூர் அருகே கண்டெய்னர் லாரிகள் மீது வாலிபர்கள் சரமாரி கல் வீசியதில் லாரி கண்ணாடிகள் உடைந்தன.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த பட்டமந்திரியில் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன.

அப்போது சாலையோரத்தில் நின்ற 2 வாலிபர்கள் அவ்வழியே சென்ற கண்டெய்னர் லாரிகள் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகள் உடைந்தன. தொடர்ந்து 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் சென்றபடியே அவ்வழியே வந்த வாகனங்கள் மீது கல்வீசி தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாரிகள் மீது கல்வீசியது யார்? என்று தெரியவில்லை.

குடிபோதையில் வாலிபர்கள் கல்வீசி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News