செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் சஸ்பெண்டு
விவசாயம் குறித்து பயிற்சி முறையாக அளிக்காமல் பயிற்சி அளித்ததாக கணக்கு காட்டுவதால், வேளாண்மை துறை இணை இயக்குனர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேளாண்மைதுறை இணை இயக்குனராக சங்கரன் பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்பு தேனி மாவட்டத்தில் வேளாண்மை துறையில் துணை இயக்குனராக பணிபுரிந்தார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அவர் பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்து பதவியேற்று பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சங்கரன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயம் குறித்து பயிற்சி முறையாக அளிக்காமல் பயிற்சி அளித்ததாக கணக்கு காட்டுவதாக அவர் மீது அப்பகுதி விவசாய சங்கங்கள் புகார் கூறினர். அந்த புகாரின்பேரில் சங்கரனை சஸ்பெண்டு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் இன்று சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்டு உத்தரவால் மாவட்ட வேளாண்மை துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேளாண்மைதுறை இணை இயக்குனராக சங்கரன் பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்பு தேனி மாவட்டத்தில் வேளாண்மை துறையில் துணை இயக்குனராக பணிபுரிந்தார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அவர் பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்து பதவியேற்று பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சங்கரன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயம் குறித்து பயிற்சி முறையாக அளிக்காமல் பயிற்சி அளித்ததாக கணக்கு காட்டுவதாக அவர் மீது அப்பகுதி விவசாய சங்கங்கள் புகார் கூறினர். அந்த புகாரின்பேரில் சங்கரனை சஸ்பெண்டு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் இன்று சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்டு உத்தரவால் மாவட்ட வேளாண்மை துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.