செய்திகள்
சிங்கப்பூரை சேர்ந்தவரிடம் ரூ.17 ஆயிரம் பணம் பறிப்பு: திருநங்கைகள் மீது புகார்
ராயப்பேட்டையில், சிங்கப்பூரை சேர்ந்தவரிடம் ரூ.17 ஆயிரம் பணம் பறித்த திருநங்கைகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் சுக்லா, இவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். உடல்நல கோளாறு காரணமாக ராயப்பேட்டையில் தங்கி இருந்து இவர் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவர் ராதாகிருஷ்ணன் சாலையில் வெளிநாட்டு பணத்தை மாற்றும் நிறுவனத்துக்கு சென்றார்.
அங்கு சவுதிஅரேபியா பணமான ரியாலை கொடுத்து இந்திய ரூபாய் நோட்டுகளாக மாற்றினார். பின்னர் ரூ.17 ஆயிரம் பணத்துடன், அவர் வெளியில் வந்தார்.
அப்போது திருநங்கைகள் 3 பேர் சுக்லாவை வழி மறித்தனர். திடீரென அவர்கள் மணிபர்சை பறித்து ரூ.17 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டனர். பின்னர் அவரது முகத்தில் மணிபர்சை வீசிவிட்டு திருநங்கைகள் தப்பிச் சென்றனர்.
இதுபற்றி ராயப்பேட்டை போலீசில் சுக்லா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் சுக்லா, இவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். உடல்நல கோளாறு காரணமாக ராயப்பேட்டையில் தங்கி இருந்து இவர் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவர் ராதாகிருஷ்ணன் சாலையில் வெளிநாட்டு பணத்தை மாற்றும் நிறுவனத்துக்கு சென்றார்.
அங்கு சவுதிஅரேபியா பணமான ரியாலை கொடுத்து இந்திய ரூபாய் நோட்டுகளாக மாற்றினார். பின்னர் ரூ.17 ஆயிரம் பணத்துடன், அவர் வெளியில் வந்தார்.
அப்போது திருநங்கைகள் 3 பேர் சுக்லாவை வழி மறித்தனர். திடீரென அவர்கள் மணிபர்சை பறித்து ரூ.17 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டனர். பின்னர் அவரது முகத்தில் மணிபர்சை வீசிவிட்டு திருநங்கைகள் தப்பிச் சென்றனர்.
இதுபற்றி ராயப்பேட்டை போலீசில் சுக்லா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.