செய்திகள்

மதுரையில் கத்தியை காட்டி வழிப்பறி: 2 பேர் கைது

Published On 2017-04-27 11:38 GMT   |   Update On 2017-04-27 11:38 GMT
மதுரையில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்தவர் மணிராஜா (வயது49). இவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது ஒரு வாலிபர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் விசாரணை நடத்தி அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த திலீப்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

பரவை வாலாஜாநகரைச் சேர்ந்தவர் பாண்டிமுருகன், ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் ஆத்திகுளம் பகுதியில் நடந்து சென்றபோது ஒரு வாலிபர் வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றார்.

திண்டுக்கல் மாவட்டம் குட்லாடம்பட்டியை சேர்ந்த பாலாஜி (35), மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் உள்ள தனது தம்பி வீட்டு வாசலில் நின்றபோது அவரது பேக்கை ஒரு வாலிபர் திருடிச்சென்றார்.

இந்த 2 புகார்கள் குறித்தும் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக ஊமச்சிகுளம் அருகே உள்ள வீரபாண்டியை சேர்ந்த தர்மர் (19) என்பவர் கைது செய்யப்பட்டார்.

Similar News