செய்திகள்

நெமிலி அருகே கிணற்றில் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பலி

Published On 2017-04-25 10:59 GMT   |   Update On 2017-04-25 10:59 GMT
நெமிலி அருகே கிணற்றில் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

நெமிலியை அடுத்த அசநெல்லிகுப்பம் காலனியை சேர்ந்தவர் கார்த்தி என்கிற கார்த்திகேயன் (வயது 32) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அம்மு என்கிற தனப்பிரியா. இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் கார்த்திகேயன் வீட்டின் புன்புறம் நடந்துசென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் அவர் தவறி விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News