செய்திகள்

நண்பர்கள் கேலி கிண்டல் செய்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

Published On 2017-04-24 08:00 GMT   |   Update On 2017-04-24 08:00 GMT
வாணியம்பாடியில் நண்பர்கள் கிண்டல் செய்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி டவுன் மில்லத் நகரை சேர்ந்தவர் பிரபு. கூலித் தொழிலாளி. இவரது மகன் அஜய்குமார் (வயது 15). நேற்று மாலை தனது நண்பர்களுடன் அஜய்குமார் விளையாடினார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருசிலர், அஜய்குமாரை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அஜய்குமார், தனது வீட்டிற்கு சென்று பெற்றோர் உள்பட யாரிடமும் பேசாமல் மவுனம் காத்தார். இரவு 10 மணியளவில் தனது அறை கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெற்றோர் சில நிமிடங்கள் கழித்து சென்று பார்த்த போது, மகன் அஜய்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுப்பற்றி தகவலறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து வந்தனர்.

சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News