செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை பணியாளர்கள் நாளை போராட்டம்

Published On 2017-04-24 02:30 GMT   |   Update On 2017-04-24 02:30 GMT
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு சாலை பணியாளர்கள் ஆதரவு அளிக்கும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் மா.சண்முகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக விவசாயிகளின் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும். தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றவேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தடுத்து நிறுத்தப்படுவதோடு, அவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் சாலை பணியாளர்களும் சிறு விடுப்பு போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே 25-ந்தேதி சாலை பணியாளர்கள் அனைவரும் பணிக்கு செல்லவேண்டாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News