செய்திகள்

திருவையாறு அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

Published On 2017-04-23 10:38 GMT   |   Update On 2017-04-23 10:38 GMT
திருவையாறு அருகே ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு அருகே உள்ள சாத்தனூரை சேர்ந்த ராஜு மகன் கார்த்தி (வயது 21). இவர் வீட்டில் இருந்த போது ஆடுகள் சத்தம் போட்டது. அவர் வெளியே சென்று பார்த்த போது ஒரு ஆட்டை 2 மர்ம நபர்கள் திருடி செல்வதை கண்டு திடுக்கிட்டார்.

அவர்களை ஊர் மக்கள் உதவியுடன் பிடித்து மருவூர் போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு விசாரணை நடத்தினார். இதில் ஆட்டை திருடியவர்கள் பொன்னாவரையை சேர்ந்த விஜயகுமார் (23), விஜயபிரதாபன் (24), என்பது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்து திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Similar News