செய்திகள்

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2017-04-22 12:00 GMT   |   Update On 2017-04-22 12:00 GMT
கரூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் (27.04.2017 அன்று) நடைபெற உள்ளது. கரூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கஉறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இக் கூட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மனுக்கள் மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கரூர். என்ற முகவரியில் முற்பகல் 11மணி யளவில் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

Similar News