செய்திகள்

ஒரத்தநாடு அருகே லோடு ஆட்டோ மோதி விவசாயி பலி: டிரைவர் கைது

Published On 2017-04-22 11:41 GMT   |   Update On 2017-04-22 11:41 GMT
ஒரத்தநாடு அருகே லோடு ஆட்டோ மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக லோடு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஒக்கநாடு கீழையூர் அம்பலகாரர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது50), விவசாயி. இவர் சம்பவத்தன்று தஞ்சை-மன்னார்குடி சாலையில் ஒக்கநாடு கீழையூர் கடைத்தெரு அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த ஒரு லோடு ஆட்டோ கோவிந்தன் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News