செய்திகள்

மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்: கவர்னருடன் ஜெயக்குமார் ஆலோசனை

Published On 2017-04-20 08:25 GMT   |   Update On 2017-04-20 08:25 GMT
மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கவர்னருடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:

கவர்னர் வித்யாசாகர் ராவை துணை சபாநாயகர் தம்பித்துரை சந்தித்து திரும்பிய பின்பு அமைச்சர் ஜெயக்குமார் சென்று சந்தித்தார். அவருடன் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்றனர்.



மீன்வள பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக கவர்னருடன் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னரிடம் அரசியல் பேசவில்லை. பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.

கவர்னரே துணைவேந்தர் பதவிக்கானவர்களை நேரில் அழைத்து, விசாரித்து 1 மணிநேரம் நேர்காணல் நடத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Similar News