செய்திகள்
மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்: கவர்னருடன் ஜெயக்குமார் ஆலோசனை
மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கவர்னருடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
கவர்னர் வித்யாசாகர் ராவை துணை சபாநாயகர் தம்பித்துரை சந்தித்து திரும்பிய பின்பு அமைச்சர் ஜெயக்குமார் சென்று சந்தித்தார். அவருடன் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்றனர்.
மீன்வள பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக கவர்னருடன் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னரிடம் அரசியல் பேசவில்லை. பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.
கவர்னரே துணைவேந்தர் பதவிக்கானவர்களை நேரில் அழைத்து, விசாரித்து 1 மணிநேரம் நேர்காணல் நடத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னர் வித்யாசாகர் ராவை துணை சபாநாயகர் தம்பித்துரை சந்தித்து திரும்பிய பின்பு அமைச்சர் ஜெயக்குமார் சென்று சந்தித்தார். அவருடன் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்றனர்.
மீன்வள பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக கவர்னருடன் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னரிடம் அரசியல் பேசவில்லை. பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.
கவர்னரே துணைவேந்தர் பதவிக்கானவர்களை நேரில் அழைத்து, விசாரித்து 1 மணிநேரம் நேர்காணல் நடத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.