செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே மனைவி திட்டியதால் விவசாயி தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே குடும்ப தகராறில் மனைவி திட்டியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரியை சேர்ந்தவர் ஜெயசீலன் மகன் பிரபு (வயது 29). விவசாயி. இவரது மனைவி பவானி (24). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக பிரபுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மீண்டும் அவர்களுக்குள் தகராறு மூண்டது. மனைவி பவானி, பிரபுவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தின சபாபதி மற்றும் போலீசார் உடலை மீட்டு விசாணை மேற்கொண்டு வருகிறார்கள்.