செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி

Published On 2017-04-17 11:10 GMT   |   Update On 2017-04-17 11:10 GMT
ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து ஆழ்வார் திருநகரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராமமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது42). கூலித் தொழிலாளியான இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்திருநகரி அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. முருகன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு முருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆழ்வார் திருநகரி போலீசார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News