செய்திகள்

கிருஷ்ணகிரியில் ஈஸ்டர் தின சிறப்பு பிரார்த்தனை

Published On 2017-04-16 17:21 GMT   |   Update On 2017-04-16 17:21 GMT
கிருஷ்ணகிரியில் உள்ள சி.எஸ்.ஐ., ஐ.இ.எல்.சி., தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் உள்ள சி.எஸ்.ஐ., ஐ.இ.எல்.சி., தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், ஈஸ்டர் நள்ளிரவு சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது. திருத்தல வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூஜையில், தர்மபுரி மறை மாவட்ட ஆயர். லாரன்ஸ் பயஸ் கலந்துக் கொண்டு திருப்பலி மறையுறை மற்றும் திருப்பலி  பூஜைகளை நிறைவேற்றி வைத்தார்.

முன்னதாக, அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து 3-வது நாள் இயேசு உயிர்த்தெழும் நிகழ்வு ஒளி வெள்ளத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இயேசுவை வரவேற்கும் வகையில் அனைவரும் கைகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Similar News