செய்திகள்
தீபாவுக்கு கொலை மிரட்டல்: வாலிபரை கைது செய்ய கோரி தூத்துக்குடியில் உண்ணாவிரதம்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த தீபாவிற்கு மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்ய கோரி தூத்துக்குடியில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா நகர் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினர் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மண்டல பொறுப்பாளருமான வக்கீல் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த தீபாவிற்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.
இதில் வக்கீல் குமார், மனோகரன், முருகேசன், மகளிரணி திருமணி, ஞானபுஷ்பம், சாந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.