செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே காதல் திருமணத்தால் இரு தரப்பினர் மோதல்

Published On 2017-04-07 12:12 GMT   |   Update On 2017-04-07 12:12 GMT
ஆண்டிப்பட்டி அருகே காதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர்.

தேனி:

ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகில் உள்ள சிரைப்பாறையை சேர்ந்தவர் பிச்சைமணி (56). இவரது மகன் அசோக்குமார். இவரும் மயிலாடும் பாறையை சேர்ந்த ரவி மகள் பிந்து என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது முதல் இரு குடும்பத்தினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று ரவி தனது நண்பர் போசுடன் சேர்ந்து பிச்சைமணி வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். பின்னர் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். படுகாயம் அடைந்த பிச்சை மணி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். போசை தேடி வருகின்றனர்.

Similar News