செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே மரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

Published On 2017-04-07 10:24 GMT   |   Update On 2017-04-07 10:24 GMT
கிருஷ்ணகிரி அருகே மரத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஜமுனாமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி(44) லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை நோக்கி லாரியை ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் கருக்கனஹள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீர் என டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் லாரி டிரைவர் சக்திவேல் தலையில் காயம் ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அவரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சக்தி இறந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News