செய்திகள்

கிருஷ்ணகிரியில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

Published On 2017-03-29 17:18 GMT   |   Update On 2017-03-29 17:18 GMT
கிருஷ்ணகிரியில் உள்ள அஞ்சல் கோட்ட அலுவலகம் எதிரில், கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் உள்ள அஞ்சல் கோட்ட அலுவலகம் எதிரில், கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை தாமதமின்றி உடனடியாக அமல்படுத்த கோரி நடந்த இந்த போராட்டத்திற்கு தலைவர் முனியப்பா தலைமை தாங்கினார்.

செயலாளர் பாதுஷா, பொருளாளர் ரங்கநாதன், ஆலோசகர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்ணா போராட்டத்தின் போது கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News