செய்திகள்

மீனவருக்கு கொலை மிரட்டல்: 6 பேர் மீது வழக்கு

Published On 2017-03-27 15:54 GMT   |   Update On 2017-03-27 15:54 GMT
திருச்செந்தூர் அருகே மீனவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை தேடி வருகிறார்கள்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டனம் செந்தில் வீதியை சேர்ந்தவர் கந்தராஜ் (வயது 48). மீனவரான இவர்  சம்பவத்தன்று அங்குள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த பெரின், லூக், பவுல், பிரினோ உள்ளிட்ட 6 பேர் கந்தராஜை வழிமறித்து அவதூறாக பேசினார்களாம்.

மேலும் அவரை அடித்து உதைத்து கொலை மிரட்டலும் விடுத்தனராம். இந்த சம்பவம் குறித்து கந்தராஜ் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் பெரின், லூக் உள்ளிட்ட 6 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

Similar News