செய்திகள்

டி.டி.வி.தினகரனை ஆதரித்து அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு

Published On 2017-03-27 09:24 GMT   |   Update On 2017-03-27 09:24 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வ.ஊ.சி.நகர் தேர்தல் பணிமனையில் பாகப் பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் அம்மாவின் தொகுதியில் அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர் டி.டி.வி.தினகரன் நிற்பதால் இப்பகுதி மக்களுக்கு அம்மாவின் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்கும். தேனியில் அவர் போகாத கிராமமே கிடையாது. அந்த அளவுக்கு நன்மை செய்துள்ளார். அதேபோல் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று பேசினார்.

அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி., அமைப்புசாரா தொழிலாளர் அணி செயலாளர் கமலகண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News