செய்திகள்

நாகர்கோவிலில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு- ஆர்ப்பாட்டம்

Published On 2017-03-23 17:00 GMT   |   Update On 2017-03-23 17:00 GMT
நீதிமன்ற கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:

நீதிமன்ற கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாகர்கோவிலில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமரன், வக்கீல்கள் மகேஷ், பெரியவன் மற்றும் கிளை தலைவர் ஜான் வியான்னி, பிரேம், சர்ச்சில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.     

Similar News