செய்திகள்
திருத்துறைப்பூண்டியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க வட்டச்செயலாளர் மணிவண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட இணைச் செயலாளர், தருமையன் வட்டப்பொருளாளர் வசுமதி, வருவாய்துறை அலுவலர் சங்க வட்டப்பொருளாளர் தமிழ்செல்வி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.
20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், தமிழக அரசு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.