செய்திகள்

சங்கராபரணி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம்: கொலை செய்யப்பட்டாரா?

Published On 2017-03-02 17:22 GMT   |   Update On 2017-03-02 17:22 GMT
வில்லியனூர் அருகே உள்ள ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் அருகே சங்கராபரணி ஆற்றில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உள்ள ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் அருகே சங்கராபரணி ஆற்றில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வில்லியனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பிணமாக கிடந்தவர் வெள்ளை நிற வேட்டியும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார்.

இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் வேலையன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் பிணத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

தண்ணீரில் கால் கழுவ சென்ற போது தவறி விழுந்து இறந்து விட்டாரா? அல்லது யாராவது கொலை செய்து பிணத்தை தண்ணிரில் வீசி விட்டார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்

Similar News