செய்திகள்
பன்னீர்செல்வம்- தீபா இணைந்து செயல்பட வேண்டும்: ஜெயலலிதா ஆவி பேசியதாக சாமியார் பேட்டி
ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும் என ஜெயலலிதா ஆவி என்னிடம் பேசியதாக சாமியார் அளித்த பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் வந்தார்.
அவர் தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி பேசியதாகவும், ஓ.பி.எஸ்சை சந்திக்க வேண்டும் என்றும் அனுமதிக்காக காத்திருந்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் விசாரித்தபோது, கண்களை மூடியபடி ஜெயலலிதா ஆவி தன் மீது இறங்கி இருப்பதாகவும், அந்த ஆவி பேசுவது போலவும் பேசினார். அவர் கூறியதாவது:-
நான் (ஜெயலலிதா) இறந்துதான் 75 நாட்களாக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தேன்.
ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும். அவர் என் அன்புக்கு பாத்தியமானவர். அவருக்கு உறுதுணையாக இருப்பேன்.
சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் வந்தார்.
அவர் தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி பேசியதாகவும், ஓ.பி.எஸ்சை சந்திக்க வேண்டும் என்றும் அனுமதிக்காக காத்திருந்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் விசாரித்தபோது, கண்களை மூடியபடி ஜெயலலிதா ஆவி தன் மீது இறங்கி இருப்பதாகவும், அந்த ஆவி பேசுவது போலவும் பேசினார். அவர் கூறியதாவது:-
நான் (ஜெயலலிதா) இறந்துதான் 75 நாட்களாக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தேன்.
ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும். அவர் என் அன்புக்கு பாத்தியமானவர். அவருக்கு உறுதுணையாக இருப்பேன்.
சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.