செய்திகள்

வாழப்பாடி அருகே பேத்தி பேச மறுத்ததால் பெண் தற்கொலை

Published On 2017-02-27 11:11 GMT   |   Update On 2017-02-27 11:11 GMT
வாழப்பாடி அருகே வீட்டு வேலை செய்யாததை பாட்டி கண்டித்ததால் பேத்திகள் பேச மறுத்தனர். இதில் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த எம்.பெருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது55). இவருக்கு ராமன்(36) என்ற மகனும், செல்லம்மாள் என்ற மகளும் உள்ளனர்.

ஈஸ்வரி, தனது மகன் ராமனுடன் வசித்து வந்தார். ராமனுக்கு தீபிகா(15), கோபிகா(13) என்ற மகளும் உள்ளனர்.

வீட்டு வேலை செய்யாததை கண்டித்ததால் பேத்திகள் இருவரும் ஈஸ்வரியுடன் பேச மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஈஸ்வரி வி‌ஷத்தன்மை கொண்ட அரளிக் கொட்டையை சாப்பிட்டு உள்ளார். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News