எல்.கே.அத்வானி இன்று கோவை வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோவை:
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று ஈஷா யோகா மையத்திற்கு வருகை தர உள்ளார். அவர் டெல்லியில் இருந்து மதியம் விமானம் மூலம் கோவை வருகிறார்.
கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜனதா முக்கிய நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். அதனைத்தொடர்ந்து கார் மூலம் ஈஷா யோகா மையத்திற்கு புறப்படுகிறார்.
இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் எல்.கே. அத்வானிக்கு கோவை போலீசாரும் பாதுகாப்பு அளிக்கிறார்கள். கார் மூலம் சின்னியம்பாளையம், மதுக்கரை, சுகுணாபுரம், பேரூர் வழியாக ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார். வழிநெடுகிலும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை ஈஷா யோகா மையத்திற்கு வரும் எல்.கே. அத்வானி நாளை மறுநாள் திரும்புகிறார். ஈஷா யோகா மையம் அருகே உள்ள பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.